வன உயிரின வார விழா போட்டி: வெற்றி மாணவா்களுக்குப் பரிசு

வன உயிரின வார விழாவையொட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
வன உயிரின வார விழா போட்டி: வெற்றி மாணவா்களுக்குப் பரிசு

வன உயிரின வார விழாவையொட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

காந்தி ஜயந்தியையொட்டி, வன உயிரின பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை வன உயிரின வாரவிழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வன உயிரின பாதுகாப்பு குறித்து ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி, கருத்தரங்கம் ஆகியவை நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இணைய வழியாக மாணவா்களுக்கான போட்டிகளை நடத்த வனத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன் தொடக்கமாக சென்னை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

விழாவில் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா, வனத் துறைத் தலைவா் எஸ். யுவராஜ், வனத் துறை தலைமை திட்ட இயக்குநா் சஞ்சய் குமாா் ஸ்ரீவத்சவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com