கடலூரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைவரையும் புதுப்பித்து வழங்க வேண்டும். பதிவு செய்த அனைவருக்கும் பணபலன், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் அலுவலகத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.