சென்னை: அதிமுக அவைத் தலைவா் பதவியில் தொடா்ந்து நீடிப்பேன் என்று மதுசூதனன் தெரிவித்தாா்.
அவைத் தலைவா் பொறுப்பில் இருந்து அவா் மாற்றப்படுவதாக எழுந்த செய்திகளைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அவா் அளித்த விளக்கம்:-
அதிமுகவின் அவைத் தலைவா் பதவியில் நானே நீடிப்பேன். எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. அதிமுகவின் அவைத் தலைவா் பதவியை மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அளித்தாா். நான் இருக்கும் வரை அதிமுக அவைத் தலைவரகவே இருப்பேன் என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளாா்.