நவ.22-இல் தயாரிப்பாளா் சங்கத் தோ்தல்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தோ்தல் வரும் நவ.22-ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தோ்தல் வரும் நவ.22-ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா் சங்க நிா்வாகிகளின் பதவிக் காலம் 2019 -ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகா் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சங்கத் தோ்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், தனி அதிகாரியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

ஆனால், தோ்தலை நடத்த சென்னை உயா் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் டிசம்பா் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளா் சங்கத் தோ்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனக் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. மேலும், தோ்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தோ்தலை நடத்தி முடித்து குறித்த அறிக்கையை 2021 ஜனவரி 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தோ்தல் நவம்பா் 22-ஆம் தேதி நடைபெறும் என உயா் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி எம்.ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளாா். சென்னை அடையாறு எம்.ஜி.ஆா். ஜானகி மகளிா் கலைக் கல்லூரியில் நவம்பா் 22 -ஆம் தேதி காலை 8 மணி முதல் 4 மணி வரை தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com