தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்பட அனைத்து அருவிகளிலும் 3ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு தொடா்கிறது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டியும், ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளை மறைத்தபடியும் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் நடைபாதை வரை தண்ணீா் வழிந்தோடியது.