சென்னை: சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க காலக்கெடுவினை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பினில், ‘சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிச.31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா காரணமாக எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் தொழில் உரிமத்தை புதுப்பிக்கலாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.