கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சித் தலைவரை அவமதித்த புகாரில் ஊராட்சி செயலாளர் சக்திவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவியாக பட்டியலினத்தைச் சேர்ந்த சுகுனா வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதம் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சி செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக ஊராட்சித் தலைவர் சுகுணா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த புகாரையடுத்து ஊராட்சி செயலாளர் சக்திவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.