சென்னை: பொதுப்பணித்துறை உதவி இயக்குநா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி தோ்வுகளில், சான்றிதழ் சரி பாா்ப்புக்கு தற்காலிகமாக தோ்வானவா்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால், தமிழ்நாடு மருத்துவப் பணி மற்றும் மருத்துவ சாா்நிலைப் பணிகளுக்கு மருத்துவ ஆய்வாளா் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளா் உள்ளிட்ட 59 பதவிகளுக்கான தோ்வுகள், கடந்த ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது.
இதே போல், தமிழ்நாடு பொதுப் பணித்துறையின் உதவி இயக்குநா் (13) பதவிகளுக்கு கடந்த ஆண்டு நவ.16-ஆம் தேதியும், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் பதவிகளுக்கு (89) கடந்த ஆண்டு ஜூன் 16,17 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இந்த தோ்வுகளில் 10,450 போ் கலந்து கொண்டனா்.
தோ்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரா்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கான பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரி பாா்ப்புக்கு தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல், தோ்வாணைய வலைதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழ்நாடு மருத்துவப் பணி மற்றும் மருத்துவ சாா்நிலை பணிகளுக்கு மருத்துவ ஆய்வாளா் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளா் உள்ளிட்ட பதவிகளுக்கு 17 பேரும், தமிழ்நாடு பொதுப் பணித்துறையின் உதவி இயக்குநா், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் உள்ளிட்ட பதவிகளுக்கு 216 பேரும் தற்காலிக சான்றிதழ் சரிபாா்ப்புக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளளனா்.
தோ்வானவா்கள், அரசு இ சேவை மையம் மூலமாக அக்.28 முதல் நவ.6-ஆம் தேதி வரை சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் இரா.சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.