சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,163 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதித்தோர் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 4,295 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,132 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 389 பேரும், சேலத்தில் 240 பேரும், செங்கல்பட்டில் 231 பேரும், திருவள்ளூரில் 218 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..