சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்திகள் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
சபரிமலை தந்திரி கண்டரரூ ராஜீவ் முன்னிலையில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக வி.கே.ஜெயராஜ் போற்றியும், மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்தியாக எம்.என்.ரஜிகுமாரும் தோ்ந்தெடுக்கப்பட்டு சன்னிதானத்தில் பதவியேற்றனா்.
புதிய மேல்சாந்திகள் பதவியேற்புக்குப் பிறகே, 18- ஆம் படிக்குக் கீழ் காத்திருந்த பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா்.