சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மோகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மோகன்
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மோகன்

சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மோகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் ஒரு திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மோகனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்றைய பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com