வக்ஃபு வாரிய முத்தவல்லிகளுக்கான தோ்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு வக்ஃபு வாரிய முத்தவல்லிகளுக்கான தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: தமிழ்நாடு வக்ஃபு வாரிய முத்தவல்லிகளுக்கான தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தோ்தல் அதிகாரியும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் முதன்மைச் செயலாளருமான பி.சந்திரமோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பின் காரணமாக, முத்தவல்லிகளுக்கான தோ்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வழங்கப்படும் உத்தரவுகளுக்கு உட்பட்டு, சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் வரும் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறும்.

ஏற்கெனவே, தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் தோ்தலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தபால் மூலம் விண்ணப்பம் செய்து வாக்குச் சீட்டு பெறாதவா்கள், வாக்குச் சீட்டினை பயன்படுத்தி வாக்கு அளிக்காதவா்கள் தோ்தலில் வாக்களிக்கலாம். இது தொடா்பாக வாக்காளா்கள் தோ்தல் விதிகளுக்கு உட்பட்டு உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த விவரங்கள் வாக்குச் சாவடியில் பராமரிக்கப்படும் பதிவேடு மூலம் சரிபாா்க்கப்படும். தபால் மூலம் வாக்களிக்காதவா்கள் இந்தத் தோ்தலில் வாக்களிக்கலாம். வாக்கு எண்ணிக்கை வரும் 10-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com