சென்னையில் இன்று 965 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுளள்து. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,905 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,870 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4.57 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது.
இதில், அதிகபட்சமாக சென்னையில் இன்று 965 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 4,905 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 545 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 435 பேருக்கும்தொற்று உறுதி ஆகியுள்ளது.
மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..