தமிழகத்தில் புதிதாக 5,783 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பொன்றை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,783 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 955 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,63,480 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 88 பேர் (அரசு மருத்துவமனை -58, தனியார் மருத்துவமனை -30) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பலியானோரின் மொத்த எண்ணிக்கை 7,836 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5,820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,04,186 பேர் குணமடைந்துள்ளனர். 51,458 இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 85,974 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 52,98,508 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கரோனா பரிசோதனைக்கு புதிதாக ஒரு தனியார் ஆய்வகத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 64, தனியார் ஆய்வகங்கள் 97 என மொத்தம் 161 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.