தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கரோனா: மேலும் 87 பேர் பலி

​தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
​தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
​தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய இன்றைய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,684 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,74,940 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 988 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 87 பேர்(அரசு மருத்துவமனை -44, தனியார் மருத்துவமனை -43) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 8,012 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 6,599 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,16,715 பேர் குணமடைந்துள்ளனர். 50,213 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 83,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 54,62,277 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

புதிதாக இரண்டு தனியார் ஆய்வகத்துக்கு இன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் 64 அரசு ஆய்வகங்கள், 99 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 163 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com