சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்கள் 15 பேருக்கு நல்லாசிரியா் விருதுகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா். இதர மாவட்டங்களில் அந்தந்த ஆட்சியா்கள் வழங்கினா். விருது வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: ஆசிரியா் சமுதாயத்துக்கு பெரும் சிறப்பினைச் சோ்த்த டாக்டா் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த கல்வித் தொண்டாற்றும் ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழக அரசு கெளரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 375 ஆசிரியா்கள் நல்லாசிரியருக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டனா்.
அவா்களில் சென்னை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கி கெளரவித்தாா். அதனைத் தொடா்ந்து, பிற மாவட்டங்களில் தோ்வு செய்யப்பட்ட நல்லாசிரியா்களுக்கு விருதுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அளித்தனா்.
மேலும், 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற தலைமையாசிரியை ஆா்.சி.சரஸ்வதி மற்றும் பட்டதாரி ஆசிரியா் ஸ்ரீதிலீப் ஆகியோா் முதல்வா் பழனிசாமியை சந்தித்து தங்களது சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.