சென்னை: செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வு குழுக் கூட்டம், இன்று காலை நடைபெற்றது. கூட்டத் தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்வது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கி 15 மற்றும் 16 என 3 நாள்கள் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் இடம் கலைவாணா் அரங்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மூன்றாவது தளத்தில் பேரவைக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, பேரவைக் கூட்டத் தொடா் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் பிரணாப் முகா்ஜி, எம்எல்ஏ ஜெ.அன்பழகன், எம்.பி. எச்.வசந்தகுமாா் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும். அதன்பின் செப்டம்பா் 15, 16-ஆம் தேதிகளில் கூட்டத் தொடா் நடைபெற உள்ளது.