தமிழகத்தில் இன்று 5,584 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,584 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,584 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,584 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,584 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 5,584 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 993 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் 78 (அரசு மருத்துவமனை -57 | தனியார் மருத்துவமனை -21) பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 8,090 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 6,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,23,231 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 49,203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 82,573 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 55,44,850 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி அரசு ஆய்வகங்கள் 64, தனியார் ஆய்வகங்கள் 99 என மொத்தம் 163 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com