தமிழகம் முழுவதிலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி திருப்பூரில் பாப்புலம் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பினர் மாவட்டத் தலைவர் ஏ.ஹபிபூர் ரஹ்மான் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற பிஎஃப்ஐ அமைப்பினர் கூறியதாவது:
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில உள்ள முல்லிம்கள் உள்பட அனைத்து சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு பொருளாளர் ஏ.தஸ்தகீர், எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளர் ம்.ஹாரிஸ் பாபு, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இமாம் அப்பாஸ் நூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.