தமிழகத்தில் மேலும் 5,519 பேருக்கு கரோனா பாதிப்பு; 77 பேர் பலி

தமிழகத்தில் மேலும் 5,519 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,519 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 5,519 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,91,571 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 987 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 77 (அரசு மருத்துவமனை -41 | தனியார் மருத்துவமனை -36) பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 8,231 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 4,35,422 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 47,918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 84, 893 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. சென்னையில் 9ஆவது நாளாக ஆயிரத்திற்கு கீழும், தமிழகத்தில் 12ஆவது நாளாக 6 ஆயரத்திற்கு கீழும் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com