சென்னை: சென்னையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மீறி, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து இரண்டு நாளில்களில் மட்டும் ரூ.2 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளான முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதவர்கள் என கடந்த இரண்டு நாள்களில் ரூ.2 கோடி அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை, பெருங்குடி, அம்பத்தூரில் அதிகளவில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.