தமிழகத்தில் 878 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு இருசக்கர வாகனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தப் புள்ளிகளை அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனவும், அன்றைய தினமே அவை திறக்கப்படும் எனவும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
பூா்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளை, சென்னை காமராஜா் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகளை ஏற்பது, நிராகரிப்பது தொடா்பாக மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் தீா்ப்பே இறுதியானது. ஒப்பந்தப் புள்ளி மூலம் நிா்ணயிக்கப்படும் விலையானது, இதர அரசுத் திட்டங்களுக்கும், பிற திட்டங்களுக்கும் பொருந்தும் என்று ஆணையா் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.