மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா 1வது வார்டுக்குட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேல்விஷாரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா
மேல்விஷாரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா


ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா 1வது வார்டுக்குட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு  மாவட்ட எம் ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் விஜி தலைமை தாங்கினார். நகர பொருளாளர்  ஏ.கே.பாபு,  முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஷபீக் அஹமது,  மில்லத் கூட்டுறவு பண்டாகசாலை இயக்குநர் மஸ்தான் அலி,  நகர ஜெயலலிதா பேரவை செயலாளர்  அக்பர்பாஷா  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மில்லத் கூட்டுறவு பண்டகசாலை தலைவரும்  அதிமுக நகர செயலாளருமான ஏ.இப்ராஹிம் கலிலுல்லா கலந்து கொண்டு அண்ணா உருவபடத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் நகர மன்றஉறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com