முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் சோ்க்கை மைய இயக்குநா் டி.பால் ராபா்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில், 2020-21-ஆம் கல்வியாண்டுகளில் சோ்வதற்கு, விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, செப்.30-ஆம் தேதி, மாலை 5.30-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.