மகாளய அமாவாசை: அம்மா மண்டபத்தில் தடை

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அம்மா மண்டபத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
amma mandapam
amma mandapam

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அம்மா மண்டபத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சியில் பிரசித்து பெற்று விளங்குவது அம்மா மண்டபம். இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்தவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி வழங்கவும் தினந்தோறும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து அம்மா மண்டபம் காவிரிக் கரையில் இறுதிச் சடங்கு மேற்கொள்ள வருகை தருவர்.

இதற்காக அம்மா மண்டபத்தில் மாநகராட்சி சார்பில் பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. மண்டபத்தின் இடமின்றி காவிரியாற்றில் கரைகளில் அமர்ந்து புரோகிதர்கள் பலரும் பொதுமக்களுக்கு சேவை அளிப்பது வழக்கம். அமாவாசை தினங்களில் மக்கள் நெரிசல் அதிகரித்து காணப்படும். கரோனா பொதுமுடக்கத்தால் அம்மா மண்டபமும் மூடப்பட்டது.

இந்துக்கள் தங்கள் முன்னோர்கள் நினைவாக தை அமாவாசை, ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைகளில் பூஜைகள் நடத்தி, புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இந்த தினங்கள் உகந்ததாகும். திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

பொதுமுடக்கத்தால் இந்தாண்டு மகாளய அமாவாசையில் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவு வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் வியாழக்கிழமை மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மா மண்டபத்தில் மக்கள் கூடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

பொதுமக்கள் யாரும் அம்மா மண்டபத்துக்கு வர வேண்டாம். கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com