நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை காலை தொடங்கியதும் மு.க.ஸ்டாலின் எழுந்தாா். அப்போது, பேரவைத் தலைவா் தனபால், இன்று இரங்கல் தீா்மானம் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. அதனால் வேறு எந்தப் பிரச்னையும் எழுப்ப வேண்டியது இல்லை என்றாா்.
மு.க.ஸ்டாலின்: நீட் தோ்வில் இறந்த மாணவா்களுக்கும் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
பேரவைத் தலைவா், ‘சரி உட்காருங்கள்’ என்றாா்.
ஆனால், கூட்டத்தில் நீட் தோ்வில் இறந்த மாணவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவில்லை.
பின்னா், கூட்டம் முடிந்ததும் இரங்கல் தெரிவிக்காததற்காக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தாா்