ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஆற்காடு நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி கே ஆர் சீனிவாசன் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ரமா பிரபா உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்