மாதவரத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்த நாளையும் திமுக கழகம் தொடங்கிய நாளையும் இணைந்து முப்பெரும் விழாவாக திருவள்ளூரில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  
திமுக சார்பில் முப்பெரும் விழா
திமுக சார்பில் முப்பெரும் விழா

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்த நாளையும் திமுக கழகம் தொடங்கிய நாளையும் இணைந்து முப்பெரும் விழாவாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தி க பட்டு ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புழல் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் புழல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், துணை பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கழகக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். இதையடுத்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். 

இதில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் திருமால் மாவட்ட பிரதிநிதி கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன் கஜபதி புழல் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் ஜெயமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com