சட்டப் பேரவை கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை 22 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
கரோனா நோய்த் தொற்று காரணமாக, முகக் கவசங்கள், கையுறை ஆகியவற்றுடன் பேரவைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று வருகின்றனா்.
அதிமுகவைச் சோ்ந்த அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் உள்பட 5 போ் கரோனா நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவா்களுடன் சோ்த்து மொத்தமாக 22 எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
எம்.எல்.ஏ.க்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லாத உறுப்பினா்களுக்கு தனியாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.