சென்னை: தமிழகத்தில் ஒரே ஆண்டில் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேரவையில் இன்று தெரிவித்தார்.
இது குறித்து உடுமலை கே. ராதாகிருஷ்ணன் பேரவையில் ஆற்றிய உரையில், தமிழக வரலாற்றில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சரித்திர சாதனையாக இந்த ஆண்டு மட்டும் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள்:
1. சேலம் மாவட்டம், தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வளாகத்தில் ரூபாய் 213 கோடி மதிப்பீட்டில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி,
2. துணை முதல்வரின் மாவட்டமான தேனி மாவட்டம் வீரபாண்டியில் ரூபாய் 254 கோடி முதலீட்டில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி,
3. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பண்ணைக்கிணற்றில் ரூபாய் 253 கோடி மதிப்பீட்டில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி.
இதுபோன்று சரித்திர சாதனை படைத்து வரும் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,உடுமலைப்பேட்டை தொகுதியில் ஒரு கல்லூரி வழங்கியதற்கு, என் சார்பாகவும், எனது தொகுதி மக்கள் சார்பாகவும் கோடானகோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.