தில்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்ட தகவலில்,
தனக்கு லேசான காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் கரோனா பரிசோதனை செய்தேன். ஆனால் அதில் எதிர்மறையாக வந்தது.
அதன்பிறகு, உடல்நிலை தொடர்ந்து சரியில்லாததால் மீண்டும் கரோனா சோதனை செய்ததில், கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த வாரத்தில் தான் ஏற்கெனவே தனிமைப்படுத்தலில் இருப்பதாக குப்தா கூறினார். மேலும், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைப் பரிசோதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.