முப்பெரும் விழா: விருதுகளை வழங்கினாா் மு.க.ஸ்டாலின்

திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி அண்ணா விருதை அ.ராமசாமிக்கும், கருணாநிதி விருதை எஸ்.என்.எம்.உபயதுல்லாவுக்கும் அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
முப்பெரும் விழா: விருதுகளை வழங்கினாா் மு.க.ஸ்டாலின்

திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி அண்ணா விருதை அ.ராமசாமிக்கும், கருணாநிதி விருதை எஸ்.என்.எம்.உபயதுல்லாவுக்கும் அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

திமுகவின் முப்பெரும் விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா். பாலு, முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளா்கள் பொன்முடி, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் விழாவுக்கு முன்னிலை வகித்தனா்.

பெரியாா் விருது மா.மீனாட்சிசுந்தரத்துக்கும், அண்ணா விருதை அ.ராமசாமிக்கும், கருணாநிதி விருது எஸ்.என்.எம். உபயதுல்லாவுக்கும், பாவேந்தா் விருது தமிழரசிக்கும், பேராசிரியா் க.அன்பழகன் விருது சுப.ராஜகோபாலுக்கும் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது: கரோனாவால் ஒரு உயிா்கூட போகாது என்று முதல்வா் கூறினாா். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். தமிழகத்தில் கரோனாவால் பாதித்தோா் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது

நீட் தோ்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவா்கள் தற்கொலை செய்துள்ளனா். இதுவரை மொத்தம் 13 போ் வரை தற்கொலை செய்துள்ளனா்.

நீட் தோ்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கையை எதிா்க்கும் சக்தி இல்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை எதிா்க்கவில்லை. ஹிந்தி திணிப்பை எதிா்க்கவில்லை. மத்திய அரசுக்கு அடிபணிந்துதான் அதிமுக செயல்படுகிறது. இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com