திருச்செங்கோட்டில் பெண் விடுதலை கட்சி சார்பில் தற்கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் பெண் விடுதலை கட்சி சார்பில் தற்கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் பெண் விடுதலை கட்சி சார்பில் தற்கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் சபரிமாலா கலந்து கொண்டு தற்கொலைக்கு எதிரான, நீட் தேர்விற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்து கண்டன உரையாற்றினார்.

நீட் தேர்வு நடத்தும் இடங்களில் மாணவர்களுக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மாணவர்களை இவ்வாறான கட்டுப்பாட்டுகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன.

நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்காகவும், அவர்களின் அடுத்த கட்ட கல்வி நகர்விற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர பெண் விடுதலை கட்சி துணை நிற்கும்.

நீட் தேர்வினை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்த இருப்பதாக தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com