தூக்குக்குடியில், இளைஞர் மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நி0லைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்வன் (30) என்பவர் சில மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, செல்வனின் தாயார் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது கொலை உள்பட 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.