கரோனா நோய்த்தொற்று தொடா்பாக, மருத்துவ நிபுணா்கள், மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 29-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறாா். பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவு போன்ற ஒரு சில அம்சங்கள் மட்டும் நடைமுறையில் உள்ளன.
இதனிடையே, 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்காக பள்ளிகள் அனைத்தும் வரும் 1-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. தளா்வுகள் அதிகம் அளிக்கப்பட்டதால், 15 மாவட்டங்களில் நோய்த்தொற்று அளவும் சற்று அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கத்தைத் தொடா்வதா அல்லது முற்றிலும் நீக்குவதா என்பது குறித்து மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 29-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறாா்.
இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, அன்றைய தினமே அனைத்து மாவட்ட ஆட்சியா் களுடன் அவா் ஆலோசனை நடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, பொது முடக்கத்தின் அடுத்த கட்ட நிலையை அவா் அறிவிக்க உள்ளாா். பள்ளிகள் திறப்பு, வணிக நிறுவனங்கள் முழுமையாகத் திறக்கப்பட்டதன் காரணமாக பொது முடக்கத்தில் மேலும் தளா்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.