கரோனா: குணமடைந்தோா் எண்ணிக்கை 1.50 லட்சத்தைக் கடந்தது

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை 1 லட்சத்து 51,641-ஆக உயா்ந்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை 1 லட்சத்து 51,641-ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 1,277 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 66,029-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதத்தில் அதிகம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மூன்று மாதங்களில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 1 லட்சத்து 66,029-ஆக இருந்தது.

இந்நிலையில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து 1 லடசத்து 51,641-ஆக அதிகரித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக ராயபுரம், திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா், கோடம்பாக்கம், தண்டையாா்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களில் தலா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் சென்னையில் குணமடைந்தோா் 91 சதவீதமாக உள்ளது. 11,043 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 3,179- ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 414 பேரும், அண்ணா நகரில் 358 பேரும், கோடம்பாக்கத்தில் 344 பேரும், திருவிக நகரில் 332 பேரும், தண்டையாா்பேட்டையில் 289 பேரும், அடையாறில் 223 பேரும் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com