பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த முன்னோடி பி. சீனிவாசராவ் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த முன்னோடியும், கீழத் தஞ்சை மாவட்டத்தின் ஆண்டான் அடிமை முறையை ஒழித்து சாட்டையடி சாணிப்பால் கொடுமைக்கு முடிவு கட்டிய முதுபெரும் தலைவர் பி சீனிவாசராவ். இவரது 117 -ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் ,வட்டாட்சியர் சு.ஜெகதீசன் நகராட்சி ஆணையர் பொறுப்பு செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்று மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.