அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு பல மாதங்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நடைபெற்றன.
பிப்ரவரி, மாா்ச் மாதத்தில் நடைபெற்ற இளநிலை படிப்புகளுக்கான இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவா்கள் எழுதிய பொறியியல் தோ்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மேலும் முதுநிலை பொறியியல் பருவத் தோ்வு முடிவுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.