பராமரிப்பில் பதிவுத் துறை இணையதளம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பதிவுத் துறையின் இணையதளம் செவ்வாய்க்கிழமை முழுவதும் முடக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை (ஏப். 14) காலை 6 மணியில் இருந்தே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பதிவுத் துறையின் இணையதளம் செவ்வாய்க்கிழமை முழுவதும் முடக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை (ஏப். 14) காலை 6 மணியில் இருந்தே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் எனவும், அன்றைய தினம் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், தமிழக பதிவுத் துறையின் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ங்ஞ்ண்ய்ங்ற்.ஞ்ா்ஸ்.ண்ய்) பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் செயல்படாமல் இருந்தது. புதன்கிழமை காலை 6 மணி முதல் வழக்கமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய அம்சங்கள், சுப தினங்களில் முன்பதிவு செய்யும் வசதி ஆகியவற்றுடன் இணையதளம் புதன்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com