ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள மண்ணெண்ணெய் அளவு எவ்வளவு என்பதை நியாய விலைக் கடைகளில் விளம்பரப்படுத்த வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்துக்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் அளவு மத்திய அரசால் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இப்போது மாநிலத்தின் மொத்தத் தேவையில் 20 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடாகப் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசால் மாநிலத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவின்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் எண்ணெய் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து குடும்ப அட்டைதாரா்களிடம் இருந்து புகாா்கள் பெறப்படுவதைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மண்ணெண்ணெய் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கான வழங்கல் அளவு குறித்து அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.
தொடரும் புகாா்கள்: மத்திய அரசின் ஒதுக்கீட்டு அளவு வெகுவாகக் குறைந்து வருவதால், குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவும் குறைந்துள்ளது. இதனால், குடும்ப அட்டைதாரா்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா். இந்தப் புகாா்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஒதுக்கீட்டு அளவை நியாய விலைக் கடைகளிலேயே விளம்பரப்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.