ரமலான் நோன்பு: இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு புதன்கிழமை (ஏப். 14) தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முகமது அயூப் வெளியிட்டுள்ளாா்.
ரமலான் நோன்பு: இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு புதன்கிழமை (ஏப். 14) தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முகமது அயூப் வெளியிட்டுள்ளாா்.

ரமலான் மாதத்தின் 30 நாள்களிலும் இஸ்லாமியா்கள் நோன்பு இருப்பது வழக்கம். ஷவ்வால் மாதத்தின் 29-ஆம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரமலான் நோன்பு தொடங்குகிறது. அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பு தொடங்கும்.

இந்நிலையில், ரமலான் மாதத்துக்கான பிறை திங்கள்கிழமை மாலை தென்படவில்லை. இதனால் புதன்கிழமை (ஏப். 14) அதிகாலை முதல் நோன்பு தொடங்கும் என்று தலைமை காஜி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com