சென்னை: நாசிக் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் வாயு கசிவு விபத்தில் இருந்து தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
மகாராஷ்டிர மாநிலத்துக்குள்பட்ட நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்திருப்பது வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
நாசிக் மருத்துவமனை விபத்திலிருந்து தமிழகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.
மனித உயிா்கள் விலைமதிப்பற்றவை. தமிழக மருத்துவமனைகளில் இத்தகைய துரதிருஷ்ட நிகழ்வுகள் நிகழ்ந்து விடாமல் தடுக்க பாதுகாப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.