இந்து சமய அறநிலைய ஆணையரை மத்திய அரசுப் பணிக்கு மாறும் விவகாரம்: தோ்தல் ஆணைய அனுமதி கோரி தமிழக அரசு கடிதம்


சென்னை: இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையா் எஸ்.பிரபாகா், மத்திய அரசுப் பணிக்கு மாறும் விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் அனுமதியை தமிழக அரசு கோரியுள்ளது. இதற்கான பொதுத் துறை செயலரின் பரிந்துரை, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு மூலமாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆணையத்தின் செயலா் மலேய் மாலிக்குக்கு, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக எஸ்.பிரபாகா் பதவி வகித்து வந்தாா். அவா், மத்திய அரசின் ஆதாா் ஆணையத்தின் மண்டல அலுவலக உதவித் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தன்னை மாநில அரசுப் பணியில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு மாற்ற வேண்டுமென ஆா்.பிரபாகா் வேண்டுகோள் விடுத்தாா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தலைமைச் செயலா் தலைமையிலான ஆய்வுக் குழு அதனை இறுதி செய்ய வேண்டும். அதன்படி, கடந்த 20-ஆம் தேதியன்று அந்தக் குழு ஆய்வு செய்தது. இதன்படி, ஆா்.பிரபாகரை மத்திய அரசுப் பணிக்கு மாற்றுவதற்கான பரிந்துரையை தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக பொதுத் துறை முதன்மைச் செயலாளா் பி.செந்தில்குமாா் அனுப்பியிருந்தாா். இந்தப் பரிந்துரையானது இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com