தீரன் சின்னமலை நினைவுநாள்: அனைத்து கட்சியினரும் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு நாளையொட்டி அரசின் சார்பில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரிய
தீரன் சின்னமலை நினைவுநாள்: அனைத்து கட்சியினரும் மரியாதை
தீரன் சின்னமலை நினைவுநாள்: அனைத்து கட்சியினரும் மரியாதை


ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு நாளையொட்டி அரசின் சார்பில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 வது நினைவு நாள், ஆடிப்பெருக்கு விழா அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. அரசின் சார்பில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் எம்எல்ஏ., வெங்கடாசலம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் பழனிச்சாமி, துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், மாவட்ட விவசாயப் பிரிவு அமைப்பாளர் சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் கொடுமுடி சின்னசாமி, மொடக்குறிச்சி தெற்கு விஜயகுமார், மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், அவல்பூந்துறை பேரூர் செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.,யுமான அந்தியூர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஈரோடு எம்பி கணேசமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாஜ., கட்சியின் சார்பில் மொடக்குறிச்சி எம்எல்ஏ., டாக்டர் சி.சரஸ்வதி மாலை அணிவித்தார் நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம், ஓபிசி தலைவர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து மாலை அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், கே.வி. ராமலிங்கம்,பி.சி ராமசாமி, பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு, சிவசுப்பிரமணி,  கிட்டுசாமி, பாலகிருஷ்ணன்,

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பழனிச்சாமி, மாநகர் மாவட்ட தலைவர் ரவி, மக்கள் ராஜன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

கொமதேக கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு எம்எல்ஏ.,வுமான ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com