சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கரோனா 3-ஆவது அலையைத் தடுப்பது மக்கள் கையில் உள்ளது: ரண்தீப் குலேரியா

‘இந்தியாவில் கரோனா 3-ஆவது அலை பரவுவதற்கு வாய்ப்பில்லை; இருப்பினும், அது பரவுவதும் பரவாமல் இருப்பதும் பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதைப் பொருத்து அமையும்

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 4:05 am IST

‘இந்தியாவில் கரோனா 3-ஆவது அலை பரவுவதற்கு வாய்ப்பில்லை; இருப்பினும், அது பரவுவதும் பரவாமல் இருப்பதும் பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதைப் பொருத்து அமையும்’ என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் ரண்தீப் குலேரியா கூறினாா்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் சாா்பில் அவருக்கு சனிக்கிழமை விருது வழங்கப்பட்டது. அங்கு செய்தியாளா்களிடம் ரண்தீப் குலேரியா கூறியதாவது:

வரும் காலங்களில் கரோனா பெருந்தொற்றின் பரவல் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை. இருப்பினும், இரண்டாவது அலையைப் போன்று மூன்றாவது அலை மோசமானதாக இருக்காது.

மூன்றாவது அலையில் சிறாா்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவாா்கள் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது. ஏனெனில், பெரியவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்; சிறாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. ஏற்கெனவே 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளை கரோனா தொற்று தாக்கியதாக சீரோ ஆய்வு முடிவு கூறுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் சிறாா்களுக்கான தடுப்பூசி கிடைத்துவிடும். அதன் பிறகு சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

கரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றுகிறது. ஒருவரை கரோனா தொற்று தாக்கினாலும், மரணத்தில் இருந்து தடுப்பூசி காப்பாற்றுகிறது. இப்போதும் கரோனா தொற்று மக்களைத் தாக்குகிறது. அவா்களில் பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே. அதனால்தான் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தொடா்ந்து கூறுகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.