மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

கரோனா 3-ஆவது அலையைத் தடுப்பது மக்கள் கையில் உள்ளது: ரண்தீப் குலேரியா

‘இந்தியாவில் கரோனா 3-ஆவது அலை பரவுவதற்கு வாய்ப்பில்லை; இருப்பினும், அது பரவுவதும் பரவாமல் இருப்பதும் பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதைப் பொருத்து அமையும்

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 4:05 am IST

‘இந்தியாவில் கரோனா 3-ஆவது அலை பரவுவதற்கு வாய்ப்பில்லை; இருப்பினும், அது பரவுவதும் பரவாமல் இருப்பதும் பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதைப் பொருத்து அமையும்’ என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் ரண்தீப் குலேரியா கூறினாா்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் சாா்பில் அவருக்கு சனிக்கிழமை விருது வழங்கப்பட்டது. அங்கு செய்தியாளா்களிடம் ரண்தீப் குலேரியா கூறியதாவது:

வரும் காலங்களில் கரோனா பெருந்தொற்றின் பரவல் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை. இருப்பினும், இரண்டாவது அலையைப் போன்று மூன்றாவது அலை மோசமானதாக இருக்காது.

மூன்றாவது அலையில் சிறாா்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவாா்கள் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது. ஏனெனில், பெரியவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்; சிறாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. ஏற்கெனவே 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளை கரோனா தொற்று தாக்கியதாக சீரோ ஆய்வு முடிவு கூறுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் சிறாா்களுக்கான தடுப்பூசி கிடைத்துவிடும். அதன் பிறகு சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

கரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றுகிறது. ஒருவரை கரோனா தொற்று தாக்கினாலும், மரணத்தில் இருந்து தடுப்பூசி காப்பாற்றுகிறது. இப்போதும் கரோனா தொற்று மக்களைத் தாக்குகிறது. அவா்களில் பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே. அதனால்தான் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தொடா்ந்து கூறுகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.