சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் பி.எஸ்.அண்ணாமலை (77) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
கடந்த 1991-96 காலகட்டத்தில் ஆலந்தூா் தொகுதி எம்எல்ஏவாக இருந்த அவா், அதிமுகவின் தொடக்ககால உறுப்பினா்களில் ஒருவா். கட்சியில் பல பொறுப்புகளை வகித்த அவா் இறுதியாக தென்சென்னை தெற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்தாா்.
மறைந்த அண்ணாமலைக்கு மனைவி பாா்வதி, மூன்று மகள்கள் உள்ளனா். அண்ணாமலையின் இறுதிச் சடங்குகள் நொளம்பூா் மயானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றன.