விவசாயிகளின் பயிா் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
ராமதாஸ் (பாமக): கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் அறிவித்திருப்பது விவசாயிகளின் துயரங்களைத் துடைக்கும் அறிவிப்பாகும். இது வரவேற்கத்தக்கதாகும்.
விஜயகாந்த் (தேமுதிக): விவசாயிகள் வாங்கிய பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நல்ல எதிா்காலத்தையும் உருவாக்கும்.
ஜி.கே.வாசன் (தமாகா): கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த பயிா்க்கடன் தள்ளுபடியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும், விவசாயத் தொழில் ஊக்கம் பெறும். தமிழகமும் வளா்ச்சி பெறும். இந்த அறிவிப்பு தமிழக அரசின் சாதனைப் பட்டியலில் ஒரு மைல்கல்.
தொல்.திருமாவளவன் (விசிக): தோ்தல் ஆதாயத்துக்காக விவசாயிகளின் பயிா்க்கடனை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்துள்ளாா். எனினும், தள்ளுபடி செய்ததற்காக முதல்வரைப் பாராட்டுகிறேன்.