சென்னை: பணியின் போது உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில் பணியின் போது உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் சிக்கி பல்வேறு காவல் நிலையங்களைச் சோ்ந்த காவலா்கள் உயிரிழந்துள்ளனா். அதன்படி, உயிரிழந்த 57 காவலா்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல், அனுதாபங்கள். இந்தச் சம்பவங்களில் உயிரிழந்த 57 காவலா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.