மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர் சங்கம் சார்பாக உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உசிலம்பட்டி கவுண்டம்பட்டி சாலையிலுள்ள நீதிமன்றம் முன்பு உசிலம்பட்டி வழக்குரைஞர் சங்கத்தின் சார்பாக உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜன்-யை கண்டித்தும் மற்றும் பணி மாற்றக் கோரி வழக்குரைஞர் சங்கத் தலைவர் கே.பி.கே.வீர பிரபாகரன் தலைமையில் செயலாளர் கே எம் செந்தில் விநாயகம் பொருளாளர் எம்.பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் சொக்கநாதன் சீனிவாசன் ராமன் ராஜசேகர் நடராஜன் தாமரைச்செல்வன் விஜயகுமார் ஜெகன் ஜெயகிருஷ்ணன் உதயராசா நல்லசிவம் சிவகுமார் விஜயராகவன் மற்றும் வழக்குரைஞர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.