கோவை கோட்டத்தை பொருத்தவரையில் 3 ஆயிரம் நகரப்பேருந்துகளும், 1500 வெளியூர் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து எவ்வித சாதகமான முடிவும் வராதாதால் பிப் 25 -ஆம் தேதி முதல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்தனர்.
இதனையொட்டி வெள்ளிக்கிழமை காலை கோவையில் 60 முதல் 7 0 சதவீதமான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது இயக்கப்படும் பேருந்துகளும் ஆளும் கட்சியான ஏடிபி தொழிற்சங்கத்தினர் மற்றும் தாற்காலிக ஊழியர்களை கொண்டு இயக்கப்படுகிறது.
குறிப்பாக வெளியூர் செல்லும் பேருந்துகள் 80 சதவீத்தற்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதியுற்றனர்.